வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்?

புனித நூல்களுல் வேதாகமத்தின் வரலாறு தனித்தன்மைவாய்ந்தது. யார் வேதாகமத்தை எழுதியது, எப்படி வேதாகமத்தின் நடை தொல் பொருள் ஆராய்சி மற்றும் வரலாற்று ஒத்ததாக இருக்கிறது என்று பார்க்கவும்...

வேதாகமத்தின் வரலாறு – யார் வேதாகமத்தை எழுதியது?

வேதாகமானது ஏறத்தாழ 1500 ஆண்டுகளாக 40 ஆசிரியர்களால் எழுதப்பட்டது. மற்ற மதப் புத்தகங்கள் போலல்லாமல், வேதாகமத்தில் உண்மையான நிகழ்வுகள், இடங்கள், மக்கள் மற்றும் உரையாடல் ஆகியவைகளை உண்மை செய்தியை போல வாசிக்கலாம். வேதாகமத்தின் ஏற்புத்தன்மையை வரலாற்று வல்லுநர்கள் மற்றும் தொல்லியல் வல்லுநர்கள் அநேக முறை உறுதிசெய்திருக்கின்றனர்.

தேவன் யார் மற்றும் அவரை அறிந்து கொள்வது எப்படி என்பதை ஆசிரியர்களின் எழுத்து நடை மற்றும் தனித்தன்மையைப் பயன்படுத்தித் தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

40 வேதாகம ஆசிரியர்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுள்ள மையச் செய்தியானது: நம்மை உண்டாக்கின தேவன் நம்மோடு ஐக்கியப்பட விரும்புகிறார். அவரை அறிந்துக்கொள்ளும்படி மற்றும் விசுவாசிக்கும் படி நம்மை அழைக்கிறார்.

வேதாகமம் நம்மை எழுச்சியூட்டுவது மட்டுமல்லாமல் வாழ்க்கை மற்றும் தேவனை நமக்கு விளக்குகிறது. நமக்கு இருக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் இது பதிலளிப்பதில்லை ஆனால் இது போதுமானது. நாம் எப்படி நோக்கத்தோடும் இரக்கத்தோடும் வாழவேண்டும் என்பதை இது நமக்குக் காட்டுகிறது. பிறறோடு ஐக்கியப்படுவது எப்படி. தேவனுடைய பலத்தை வழிநடத்துதலை சார்ந்திருக்க மற்றும் நம்மீது அவருக்கு இருக்கும் அன்பில் சந்தோஷப்பட இது நம்மை உற்ச்சாகப்படுத்துகிறது. மேலும் நாம் எப்படி நித்திய வாழ்வை பெற முடியும் என்பதை வேதாகமம் நமக்குச் சொல்கிறது.

வேதாகமத்தின் வரலாற்றுத் துல்லியம் மற்றும் இது தேவனுடைய வார்த்தை என்பதற்கான அறிய பலவிதமான சான்றுகள் உதவுகின்றன. (இந்தக் கட்டுரையின் துணைப்பகுதிகள் இங்கு இருக்கிறது, இதை உங்களின் விருப்பம் போல் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்)

  1. தொல்பொருள் ஆராய்சி வேதாகமத்திற்கு எப்படி ஆதாரமாக இருக்கிறது.
  2. காலப்போக்கில் வேத வசனங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அது முதலில் எழுதப்பட்டவண்ணமே நம்மிடம் இருக்கிறதா?
  3. இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷப்புத்தகங்கள் நம்பத்தகுந்தவைகளா?
  4. வேதாகமத்தில் ஏதேனும் முரண்பாடு இருக்கிறதா?
  5. வேதாகமம் இயேசுவை குறித்துச் சொன்னதை வரலாற்று வல்லுநர்கள் உறுதிபடுத்துகின்றனரா?
  6. இவைகள் தான் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் என்று எப்படித் தீர்மானிக்கப்பட்டது? ஏன் யூதாவின் சுவிசேஷம் சேர்க்கப்படவில்லை?
  7. ஏன் சுவிசேஷ புத்தகங்களை எழுத 30 லிருந்து 60 ஆண்டுகள் ஆனது?
  8. இயேசு உண்மையில் என்ன செய்தார் மற்றும் சொன்னார் என்று சுவிசேஷ புத்தகத்தில் சொல்லப்பட்;டவைகள் முக்கியமானதா?

1. தொல்பொருள் ஆராய்சி வேதாகமத்திற்கு எப்படி ஆதாரமாக இருக்கிறது.

வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று தொல் பொருள் ஆராய்சி நமக்கு நிரூபிக்க முடியாது எனினும் தொல் பொருள் ஆராய்சி வேதாகமத்தின் வரலாற்றுத் துல்லியத்தை உறுதிபடுத்த முடியும். வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், இராஜாக்கள், பட்டணங்கள், மற்றும் பண்டிகைகள் ஆகியவைகளின் பெயர்களைத் தொல்லியலானது தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறது. சில நேரங்களில் வரலாற்று வல்லுநர்கள் கூடச் சிந்திக்காத மக்கள் மற்றும் இடங்களாக அவைகள் இருக்கலாம். உதாரணமாக, யோவான் சுவிசேஷம் பெதஸ்தா குளத்தண்டையில் இயேசு சுகமாக்கிய முடவனைக் குறித்துச் சொல்கிறது. வசனம் அங்கு இருந்து ஐந்து மண்டபங்களைக் குறிப்பிடுகிறது. இது பூமிக்கு 40 அடி அடியில் இந்த ஐந்து மண்டபங்களுடன் முழுமையாக இருப்பதை இதைத் தொல்லியல் வல்லுநர்கள் கண்டுபிடிக்கும் வரை வல்லுநர்கள் இப்படி ஒரு குளம் இருந்ததாக நினைக்கவில்லை.1

வேதாகமத்தில் அநேக வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன அவைகள் எல்லாம் தொல்லியல் மூலம் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனால் வேதாகமத்திற்கு எந்த விதத்திலும் தொல்லியல் தகவல்கள் முறண்பாடாக இருந்ததில்லை.2

செய்தியாளர் லீ ஸ்டோர்பேல் மோர்மோன்களின் புத்தகத்தைப் பற்றிக் கருத்தை முரண்பாடாகச் செய்தியை தெரிவித்திருக்கிறார்: அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை மீண்டும் மீண்டும் உறுதிசெய்யத் தவறிவிட்டது. நான் சுமித்சோனியன் கல்வி நிறுவனத்திற்கு மோர்மோனிச கூற்றுகளை உறுதிசெய்யக் கூடிய ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா என்று எழுதியதை நினைவு கூறுகிறேன். புது உலகமாகிய தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் புத்தகத்தின் முக்கியச் செய்திக்கும் எந்த வித நேரடி தொடர்பும் இல்லை என்றே தொல்பொருள் ஆராய்சியாளர்கள் பார்க்கின்றனர் என்ற தெளிவான கருத்தே சொல்லப்பட்டது. தொல்பொருள் ஆராய்சியாளர்கள் மோர்மோன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட எந்தப் பட்டணங்களையும், நபர்களையும், பெயர்களையும், அல்லது இடங்களையும் கண்டுபிடித்ததில்லை.3

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தல நடபடிகளில் லூக்கா குறிப்பிட்ட பல பழமையான இடங்கள் தொல்பொருள் ஆராய்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “லூக்கா குறிப்பிட்ட முப்பத்தி மூன்று தேசங்கள், ஐம்பத்தி நாளு பட்டணங்கள் மற்றும் ஒன்பது தீவுகள் ஆகிய எல்லா இடங்களும் எந்தப் பிழையும் இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளன.”4

தொல்பொருள் ஆராய்சியாளர்கள் வேதாகமத்தை பற்றிய பல தவறான ஆதாரங் கோட்பாடுகளை மறுத்துள்ளனர். உதாரணத்திற்கு மோசே பஞ்சாகமத்தை (வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள்) எழுதியிருக்க முடியாது ஏனென்றால் அவர் இருந்த காலத்தில் எழுத்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கருப்பு கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். “இதனில் ஹமுராபி விரிவான பிரமாணங்கள் ஆப்பு வடிவ எழுத்துக்களில் இருந்தன. இவைகள் மோசேயினுடைய காலத்திற்கு முந்தினதா? இல்லை இவைகள் மோசேயினுடைய காலத்திற்குப் பிந்தினதே அதுமட்டுமல்ல இவைகள் ஆபிரகாமின் காலத்திற்கு முந்தினவைகள் (கி.மு 2,000). அது குறைந்தது மோசேயை விட மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தியது.”5

வேதாகமத்தின் வரலாற்றுத் துல்லியங்களைத் தொல்பொருள் ஆரய்ச்சிகள் தொடர்ந்து உறுதிசெய்கின்றன.

மேலும் விபரங்களுக்கு இதைத் தேர்வு செய்து முக்கியத் தொல்பொருள் ஆராய்சியின் கண்டுபிடிப்புகளின் அட்டவனையைப் பார்க்கலாம்.

2. காலப்போக்கில் வேத வசனங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அது முதலில் எழுதப்பட்டவண்ணமே நம்மிடம் இருக்கிறதா?

வேதாகமம் பல காலங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது எனவே இந்த மொழிபெயர்ப்பு நிலைகளில் இது சிதைவடைந்திருக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். மொழிபெயர்ப்பானது மற்ற மொழிகளிலிருந்து செய்யப்பட்டிருக்குமே ஆனால் இது சிதைவடைந்திருக்க வாய்பிருக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பானது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூல பிரதியின் படி மூல பாஷையான கிரேக்கம், எபிரேயம் மற்றும் அரமிக்கிலிருந்து நேரடியாகச் செய்யப்படுகிறது.

பழைய ஏற்பாட்டின் நம்பகதன்மை 1947 –ல் தொல் பொருள் ஆராய்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் மூலம் மற்றும் இஸ்ரவேலின் இன்றைய மேற்கு கரையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன. “சவக்கடல் சுருள்கள்” 1000 வருடத்திற்கும் பழைமையான நம்மிடம் இருக்கும் மூலபுத்தகங்களை விடப் பழமையான பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. நம்மிடம் இருக்கக் கூடிய 1000 வருடங்கள் பழமையான மூலபுத்தகங்களோடு ஒப்பிடும் போது இவைகள் 99.5 சதவீதம் ஒத்துப்போவதாக இருக்கிறது. 5 சதவீதம் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது அவைகளும் வார்த்தை பிழைகள் மற்றும் வாக்கியத்தின் அமைப்பு. இவைகள் எந்த விதத்திலும் வாக்கியத்தினுடைய அர்த்தத்தை மாற்றுவது இல்லை.

புதிய ஏற்பாடானது அதிக நம்பகத்தன்மையுள்ள பழமையான அவணம் ஆகும். நம்மிடம் ஆயிரக்கணக்கான புதிய ஏற்பாட்டுப் பிரதிகள் உள்ளன அவை அனைத்தும் அசல் பிரதியோடு ஒத்த சேதிகளிலே எழுதப்பட்டுள்ளன. பிலாட்டோ அல்லது அரிஸ்டாட்டில் அல்லது கோமர் இலியட் ஆகியவர்களின் எழுத்துக்கள் அவர்களால் எழுதப்பட்டவைகள் என்கிற நம்பகத்தன்மையை விட ஆசிரியர்களால் எழுதப்பட்ட படியே புதிய ஏற்பாடு யாரால் எழுதப்பட்டதோ அதே நிலைத்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

புதிய ஏற்பாட்டைப் பழமையாக எழுதப்பட்ட ஆவணங்களோடு ஒப்பிட்டு பார்க்க.

3. இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷப்புத்தகங்கள் நம்பத்தகுந்தவைகளா?

புதிய ஏற்பாட்டின் நான்கு ஆசிரியர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத் தங்களுடைய கோணத்தில் எழுதியுள்ளனர். இவைகளே நான்கு சுவிசேஷப் புத்தகம் என்று அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்கள். இவர்களது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை நாம் எப்படிச் சரியானது என்று நம்ப முடியும்.

வாழ்க்கை குறிப்பு சரியானதா என்று தீர்மானிக்கும் போது வரலாற்று வல்லுநர்கள் கேட்கும் முதல் கேள்வி: வேறு எந்த ஆவணமாவது இதே தகவல்களை இந்த நபரை குறித்துத் தருகின்றதா? நீங்கள் ஜனாதிபதி ஜான் கேன்னடி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சேகரிக்கிறீர்கள் என்று யூகித்துக்கொள்வோம். அவருடைய குடும்பம், பதவிக்காலம், அவர் கியூபா ஏவுகனை நெருக்கடியை அவர் கையாண்ட விதம் அகிய அனைத்து தகவல்களும் இவரைக் குறித்த மற்ற எல்லா வாழ்க்கை குறிப்புகளுக்கும் ஒத்ததாகவே காணப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு வாழ்க்கை குறிப்பு மட்டும் அவர் பத்து ஆண்டுகள் தென் ஆப்பிரிக்காவில் பாதிரியராகப் பணியாற்றினார் என்ற தகவல் கொடுத்து மற்ற அனைத்து வாழ்க்கை குறிப்புகளும் அவர் அமெரிக்காவில் வாழ்ந்தார் என்பதைக் குறிக்கும் போது என்ன செய்வீர்கள்? விவேகமான வராலற்றாசிரியர் மற்றவைகளோடு ஒத்துபோகும் தகவல்களையே ஏற்றுக்கொள்வார்கள்.

இயேசு கிறிஸ்துவை குறித்துப் பார்க்கும் போது, அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் குறித்த பலவிதமான அறிக்கையில் அவரைக் குறித்து ஒரே விதமான உண்மைகளைப் பார்கிறோமா? ஆம். இயேசுவை குறித்த பல வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அவரைக் குறித்த உண்மையான தகவல்களைத் தருவில் ஒத்திருப்பதை இங்கு உதாரணமாகப் பார்க்கலாம்.

  மத்தேயு மாற்கு லூக்கா யோவான்
கன்னியின் வயிற்றில் இயேசு பிறந்தார் 1:18-25 - 1:27-34 -
அவர் பெத்தலகேமில் பிறந்தார் 2:1 - 2:4 -
அவர் நாசரேத்தில் வாழ்ந்தார் 2:23 1:9-24 2:51,4:16 1:45-46
இயேசு யோவான் ஸ்நானகனிடத்தில் ஞானஸ்தானம் பெற்றார் 3:1-15 1:4-9 3:1-22 -
அவர் சுகப்படுத்தும் அற்புதங்களைச் செய்தார் 4:24, மற்றும் பல 1:34, மற்றும் பல 4:40 மற்றும் பல 9:7
அவர் தண்ணீரின் மேல் நடந்தார் 14:25 6:48 - 6:19
அவர் ஜந்தாயிரம் பேரை ஜந்து அப்பம் மற்றும்
இரண்டு மீன்களைக் கொண்டு போசித்தார்
14:7 6:38. 7 9:13 6:9
இயேசு சதாரண மனிதர்களுக்குப் போதித்தார் 5:1 4:25, 7:28 9:11 18:20
சமுதாயத்தினால் புரக்கணிக்கப்பட்டவர்களோடு நேரங்களைச் செலவிட்டார் 9:10, 21:31 2:15-16 5:29, 7:29 8:3
அவர் மதத் தலைவர்களோடு விவாதித்தார் 15:7 7:6 12:56 8:1-58
மதத் தலைவர்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் 12:14 3:6 19:47 11:45-57
அவர்கள் இயேசுவை ரோமர்களிடம் ஒப்படைத்தனர் 27:1-2 15:10 23:1 18:28
இயேசு சவுக்கால் அடிக்கப்பட்டார் 27:26 15:15 - 19:1
அவர் சிலுவையில் அரையப்பட்டார் 27:26-50 15:22-37 23:33-46 19:16-30
அவர் கல்லரையில் அடக்கம்பண்ணப்பட்டார் 27:57-61 15:43-47 23:50-55 19:38-42
இயேசு உயிரோடு எழுந்து தன்னுடைய
சிஷர்களுக்குத் தரிசனமானார்
28:1-20 16:1-20 24:1-53 20:1-31

இரண்டு சுவிசேஷப் புத்தகங்கள் இயேசுவை நன்கு தனிப்பட்ட முறையில் அறிந்த மற்றும் அவரோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த அப்போஸ்தலர் மத்தேயு மற்றும் யோவானால் எழுதப்பட்டவைகள். மற்ற இரண்டு புத்தகங்களும் அப்போஸ்தலரோடு நெருங்கியிருந்த மாற்கு மற்றும் லூக்காவினால் எழுதப்பட்டவைகள். அவர்கள் எழுதிய உண்மைகளோடு இந்த எழுத்தாளர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தது. ஆதி சபை இந்த நான்கு சுவிசேஷப் புத்தகங்களையும் ஏற்றுக்கொண்டது ஏனெனில் இவைகள் இயேசுகிறிஸ்து வாழ்க்கையைக் குறித்த ஏற்கனவே இருந்த பொதுவான தகவல்களே.

மேலும், சுவிசேஷ புத்தகமானது அவர் அவர்களுடைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட அனுதின நிகழ்வுகளின் செய்திகளை வாசிப்பது போலவே இருக்கிறது. விளக்கங்கள் ஒவ்வொருவருக்கும் தனிதன்மையானது ஆனால் நிகழ்வுகள் ஒன்ரோடு ஒன்று ஒத்திருக்கிறது. வரலாற்று வல்லூநர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் உறுதிசெய்த இடங்களின் பெயர்கள் மற்றும் கலாச்சாரங்களைக் குறித்த தகவல்களைச் சுவிசேஷப் புத்தகங்கள் தருகின்றன.

ஒரு சுவிசேஷப் புத்தகத்திலிருந்து மாதிரிக்கு, இங்கு அழுத்தவும்.

4. வேதாகமம் இயேசுவை குறித்துச் சொன்னதை வரலாற்று வல்லுநர்கள் உறுதிபடுத்துகின்றனரா?

இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார், அவர் ரோமர்களால் சிலுவையில் அறையப்பட்டார் மற்றும் மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தார் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். இயேசுவினுடைய வாழ்க்கை மற்றும் அவருடைய சீஷர்களைக் குறித்த வேதாகம குறிப்புகளை எண்ணுக்கடங்காத பண்டைய வரலாற்று வல்லுநர்கள் உறுதிபடுத்துகின்றனர்:

கோர்நலியஸ் டக்டியஸ் (கி.பி 55-120), பண்டைய உலகின் மிகத் துல்லியமான வரலாற்று வல்லுநர்களுள் ஒருவரான முதல் நூற்றாண்டு ரோம வரலாற்று வல்லுநர் ஆவார்.6 டக்டியஸிடம் இருந்து வந்த வல்லுநர்கள் நம்மிடம் சொல்வது, ரோம ராயன் நீயூரோ கிறிஸ்டஸ் கிறிஸ்து என்ற பெயரிலிருந்து வந்த கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தினான், அவர்கள் டிபேரியசின் ஆட்சி நாட்களில் ரோம பேரரசின் அதிகாரியாகிய போந்து பிலாத்துவின் கையில் மிகுந்த தண்டணைக்கு உட்படுத்தப்பட்டனர்...7

ஃபிலேவியஸ் ஜேசிபஸ், ஒரு யூதா வரலாற்று வல்லுநர் (கி.பி. 38-100), அவருடைய யூத தொன்மை நடைமுறைகளைக் குறிப்பிடும் போது இயேசுவை குறித்து எழுதியிருக்கிறார். “ஜேசிபஸ் இயேசுவை குறித்துக் குறிப்பிடும் போது அவர் ஆச்சரியமூட்டும் அற்புதங்கள் பல செய்தார், அநேகருக்கு போதித்தார், யூதா மற்றும் கிரேக்கர்களில் தனக்கு அநேக சீஷர்களைப் பெற்றிருந்தார், மேசியாவாக விசுவாசிக்கப்பட்டார், யூதா தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டுப் பிலாத்துவினால் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கப்பட்டார் மற்றும் உயிர்தொழுந்தவராகக் கருதப்பட்டார் என்று எழுதியிருக்கிறார்.”8

சுடோனியஸ், பிலினி தி ஏங்கர், மற்றும் தால்லஸ் ஆகியவர்களும் கிறிஸ்தவ ஆராதனை மற்றும் புதிய ஏற்பாட்டோடு ஒத்திருக்கிற உபத்திரவத்தையும் குறித்து எழுதியுள்ளனர்.

மேலும் யூதர்களின் வேதமான தல்முத் -ம் “இயேசுவுக்கு எதிராக ஒருபுறச்சாய்வானது அல்ல, இது இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகலில் கருத்து ஒன்றுபடுகிறது. இயேசு மணவாழ்க்கை மூலம் பிறந்தவர், சீஷர்களைச் சேர்த்துக்கொண்டார், அவரைக் குறித்துத் தேவ தூஷசனம் சொன்னார், அற்புதங்களைச் செய்தார், ஆனால் இந்த அற்புதங்கள் அசுத்த ஆவிகளினால் செய்தார் தேவன் மூலமாய் அல்ல என்று தல்முத்திலிருந்து நாம் அறிந்துக்கொள்கிறோம்.”9

இந்த அற்புதமான தகவல்களின் மூலம் அநேக பண்டைய வரலாற்று வல்லுநர்கள் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களையே கருத்தில் கொண்டுள்ளனர் என்றும் ரோம இராஜூயத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் புரிந்துகொள்ள முடியாத ஆசாரியர்களை அவர்கள் கவணத்தில்கொள்ளவில்லை என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. புதிய ஏற்பாட்டில் காணப்படும் அநேக நிகழ்வுகளை இந்தப் பண்டைய வரலாற்று வல்லுநர்கள் (யூதா, கிரேக்க மற்றும் ரோம) கிறிஸ்தவர்களாக இல்லாத போதிலும் உறுதிசெய்கின்றனர்.

5. வேதாகமத்தில் ஏதேனும் முரண்பாடு இருக்கிறதா?

வேதாகமம் முழுவதும் முரண்பாடானது என்று சிலர் சொல்வது உண்மையா? காணப்படும் முரண்பாடுகள் வேதாகமத்தின் அளவு மற்றும் வரையரையின் படி பார்க்கும் போது மிகக் குறைவானதே ஆகும். காணப்படும் முரண்பாடுகள் பிரச்சனையை அல்ல ஆர்வத்தையே எற்படுத்துகிறது. அவைகள் எந்த முக்கியமான நிகழ்வுகளையும் அல்லது விசுவாசத்தையும் தொடர்புடையவைகள் அல்ல.

இங்கு முரண்பாடுகள் என அழைக்கப்படுபவைகளின் சில உதாரணங்களைப் பார்க்கலாம். பிலாத்து இயேசு அறையப்படும் சிலுவையில் சிறு பலகை பெறிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். மூன்று சுவிசேஷங்களும் அந்தப் பலகையில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று குறிப்பிடுகின்றன:
     மத்தேயு: “இவர் யூதர்களின் இராஜாவாகிய இயேசு”
     மாற்கு: “யூதர்களின் இராஜா”
     யோவான்: “யூதர்களின் இராஜாவாகிய நசரேயனாகிய இயேசு”

வார்த்தைகளின் வித்தியாசம் ஒரு வேளை முரண்பாடாகக் காணப்படலாம். இங்குக் குறிப்பிடதக்கது என்னவென்றால், மூன்று ஆசிரியர்களும் ஒரே நிகழ்வை குறிக்கும் போது இதைக் குறிப்பிட்டிருக்கின்றனர். அது இயேசு சிலுவையில் அறையப்பட்டதே ஆகும். இதனில் அவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இசைந்திருக்கின்றனர். மேலும் அவர்கள் அந்தச் சிறு பலகை சிலுவையின் மேல் பொறிக்கப்பட்டது மற்றும் அதனில் எழுதப்பட்ட வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதும் இம்முன்று சுவிசேஷத்திலும் காணப்படுகிறது.

எழுதப்பட்ட சரியான வார்த்தை என்ன? சுவிசேஷத்தின் மூல பாஷையான கிரேக்கத்தில் நாம் இன்று பயன்படுத்துவது போல் நேரடி குறியீட்டை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. சுவிசேஷ புத்தகத்தை எழுதியவர்கள் மறைமுகக் குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர் எனவே அவைகளே சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும்.

காணப்படும் முரண்பாட்டிற்கு மற்றொரு உதாரணத்தை இங்குக் காணலாம். இயேசு உயிர்தெழுவதற்கு முன் கல்லரையிலிருந்தது இரண்டு இரவுகளா அல்லது மூன்று இரவுகளா? இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு சொன்னார், “யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” (மத்தேயு 12:40). மாற்கு இயேசு சொன்ன மற்றொரு வாக்கியத்தைக் குறிப்பிடுகிறார், “இதோ, எருசலேமுக்குப் போகிறோம், அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறதேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்;, ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.”(மாற்கு 10:33-34)

இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டார் மற்றும் அவர் ஞாயிற்றுகிழமை உயிர்தெழுந்தார் எனக் காணப்படுகிறது. எனவே இது எப்படி மூன்று இரவு மற்றும் மூன்று பகலாகக் கல்லரையில் இருந்திருப்பார்? இரவு அல்லது பகலின் எந்த ஒரு பகுதியும் ஒரு முழு நாளாகவும் இரவாகவும் கருதப்படுவது இயேசுவின் நாட்களில் இருந்த யூதர்களின் உருவக சொல்லாகும். எனவே இயேசுவின் கலாச்சாரத்தின் படி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுகிழமை மூன்று நாள் மற்றும் மூன்று பகலாகக் கருதப்படுகிறது. இன்றைய தினத்திலும் இது போலவே நாம் பேசுகிறோம்-- நான் நாள் ழுமுவதும் பொருட்களை வாங்குவதில் செலவுசெய்தேன் என்று சொல்லும் போது அவர் 24 மணி நேரமும் அவ்வாறாகச் செலவிடவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

இது புதிய ஏற்பாட்டில் காணப்படும் தனிதன்மையான முரண்பாடுகள் ஆகும். அநேக முரண்பாடுகள் வசனத்தைக் குறிப்பாய் பார்க்கும் போது அல்லது வரலாற்றுப் பின்னனியத்தைப் படிக்கும் போது தீர்க்கப்படுகிறது.

6. இவைகள் தான் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் என்று எப்படித் தீர்மானிக்கப்பட்டது? ஏன் இதனோடு தள்ளுபடி ஆகமம் (அப்போகிரிப்பா), யூதாவின் சுவிசேஷம் அல்லது தோமாவின் சுவிசேஷம் சேர்க்கப்படவில்லை?

இன்று புதிய ஏற்பாட்டிளுள்ள புத்தகங்களின் பட்டியலை நாம் விசுவாசிக்க முக்கியக் காரணங்கள் இருக்கிறது. புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் எழுதப்பட்ட உடன் அவைகள் சபைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தப் புத்தகங்களை எழுதியவர்கள் இயேசுவின் சிநேகிதர்கள் அல்லது சீஷர்கள், இயேசுவினால் ஆதி சபையில் தலைமைத்துவத்தில் நிர்ணயிக்கப்பட்ட சீஷர்களின் சீஷர்கள். மத்தேயு மற்றும் யோவான் இயேசுவின் நெருங்கிய சீஷர்கள். மாற்கு மற்றும் லூக்கா அப்போஸ்தலர்களின் சீஷர்கள் அவர்கள் இயேசுவின் வாழ்கையைக் குறித்து அப்போஸ்தலர்கள் மூலம் அறிந்துக்கொண்டவர்கள்.

மற்ற புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இயேசுவோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்: யாக்கோபு மற்றும் யூதா இயேசுவின் சகோதரர்கள். இவர்கள் முதலில் இயேசுவை விசுவாசிக்கவில்லை. பேதுரு அவருடைய 12 சீஷர்களுள் ஒருவர். பவுல் முதலில் கிறிஸ்தவத்தை வண்மையாக எதிர்ப்பவராகவும் மதக்குருக்களின் வம்சவழியில் வந்தவராகவும் இருந்தார். ஆனால் பின்பு இயேசு மரித்து உயிர்த்தார் என்பதை விசுவாசித்து அவருடைய ஆர்வமிக்கச் சீஷராக மாறினார்.

புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள்; ஆயிரக்கணக்கானவர்களின் சாட்சிகளையே வெளிப்படுத்துகிறது. எத்தனையோ புத்தகங்கள் நூறாண்டுகளக்கு பின்பு எழுதப்பட்டிருப்பினும் அவைகள் உண்மையானவைகள் அல்ல என்பதைச் சபை கண்டுக்கொள்வதில் எந்தக் கடினமும் இல்லை. உதாரணமாக. யூதாவின் சுவிசேஷம் யூதாவின் மரணத்திற்குப் பின்பு ஞானக் கோட்பாட்டாளர்களால் (ஞாஸ்டிக்) கி.பி. 130-170 ஆண்டுகளில் எழுதப்பட்டது. தோமாவின் சுவிசேஷம் கி.பி. 140ம் ஆண்டில் அப்போஸ்தலர்களின் பெயரில் எழுதப்பட்டது. இவைகள் மற்றும் அநேக ஞானக் கோட்பாட்டுச் சுவிசேஷங்கள் இயேசுவின்; மற்றும் பழைய ஏற்பாட்டின் உபதேசத்திற்கும் முரண்பட்டதாகவும் மற்றும் வரலாற்று மற்றும் இடங்களைக் குறித்த குறிப்புகளில் தவறுகளும் காணப்படுகின்றன.10

கி.பி 367 -ல் அதானாசியஸ் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் 27 என்று குறிப்பிட்டார் (இன்று நம்மிடம் இருக்கும் அதே புத்தகங்கள் பட்டியல்). அதற்குப் பின்பு ஜெரோம் மற்றும் அகஸ்டின் இதே புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டனர். இந்தப் பட்டியல் அநேக கிறிஸ்தவர்களுக்குத் தேவை இல்லை என்ற போதிலும். கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் இவைகளைப் பெருவாரியான சபைகள் இந்தப் புத்தகங்களில் பட்டியலை அங்கிகரித்துப் பயன்படுத்தி வந்தனர். சபையானது கிரேக்க மொழி பேசும் மக்களைக் கடந்து வளர்ந்த போது வசனங்களை மொழிபெயர்க்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது மற்றும் பிரிவுகள் ஏற்பட்டன அவர்கள் அவர்களுடைய பரிசுத்த புத்தகங்களைப் பின்பற்றினர், இவைகள் நிறந்தரமான புத்தகப் பட்டியலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உருவாக்கியது.

7. ஏன் புதிய ஏற்பாட்டு சுவிசேஷ புத்தகங்களை எழுத 30 லிருந்து 60 ஆண்டுகள் ஆனது?

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலுக்குப் பின் சுவிசேஷ புத்தகங்கள் எழுதப்படுவதற்கான காரணம் அவைகளுக்கான அவசியம் இல்லாததே முக்கியக் காரணம் ஆகும். முதலில் சுவிசேஷம் வாய் மொழியாக எருசலேம் பகுதிகளில் பிரஸ்தாபப்படுத்தப்பட்டது. எனவே இயேசுவின் வாழ்க்கையை எழுத்து வடிவில் அமைக்க அவசியம் இல்லை. ஏனென்றால் எருசலேமில் இருந்தவர்கள் இயேசுவின் சாட்சிகள் மற்றும் அவருடைய ஊழியத்தை நன்கு அறித்தவர்களாக இருந்தனர்.11

சுவிசேஷம் எருசலேமிற்க்கு அப்பாற்பட்ட பகுதிகளில் பிரசங்கிக்கப்பட்ட போது அங்குக் கண்கண்ட சாட்சிகள் இல்லை, எனவே இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைக் குறித்த மற்றவர்களுக்குப் போதிக்கச் சுவிசேஷ புத்தகங்கள் எழுதப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. அநேக இறை வல்லுநர்கள் சுவிசேஷ புத்தகங்கள் இயேசுவின் மரணத்திற்குப் பின் 30 இருந்து 60 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் அதை எழுதுவதற்கான நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்: “மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாயத் தோன்றிற்று.”12

இயேசுவை குறித்து மேலும் அறிய இந்தக் கட்டுரை நல்ல சுருக்கத்தைத் தருகிறது: குருட்டு விசுவாசத்திற்கு அப்பால்.

8. இயேசு உண்மையில் என்ன செய்தார் மற்றும் சொன்னார் என்று சுவிசேஷ புத்தகத்தில் சொல்லப்பட்டவைகள் முக்கியமானவைகளா?

ஆம். விசுவாசத்திற்கு ஏதேனும் மதிப்பு இருக்குமேயானால் அது உண்மை மற்றும் நிஜத்தின் அடிப்படியிலானது. ஏன் என்று இங்குப் பார்க்கலாம். நீங்கள் லண்டனுக்கு விமானத்தில் செல்ல தீர்மானிக்கும் போது, விமானம் பறக்கும் மற்றும் இயந்திரங்கள் நம்பத்தகுந்தது, விமானி பயிற்சி பெற்றவர் மற்றும் எந்தத் தீவிரவாதிகளும் விமானத்தில் இல்லை என்கிற விசுவாசம் உங்களுக்கு வேண்டும். எனினும் உங்கள் விசுவாசம் உங்களை லண்டனுக்குக் கொண்டு செல்வதில்லை. நீங்கள் விமானத்தில் ஏறுவதற்கு உங்களுடைய விசுவாசம் உதவியாக இருக்கும். ஆனால் விமானம் மற்றும் விமானியின் நாணயமே உங்களை லண்டனில் கொண்டு போய்ச் சேர்த்தது. நீங்கள் உங்களுடைய நேர்மறையான விமான அனுபவத்தைச் சார்ந்து கொள்ளலாம். ஆனால் உங்களின் நேர்மறையான அனுபவம் விமானத்தை லண்டனில் சேர்க்க போதுமானது அல்ல. விசுவாசத்தின் குறிக்கோளே இங்கு முக்கியம் ஆகும் - இது நம்பத்தகுந்ததாக இருக்கிறதா?

புதிய ஏற்பாடில் இயேசுவை குறித்த தகவல்கள் சரியானதா மற்றும் நம்பத்தகுந்ததா? ஆம். நாம் புதிய ஏற்பாட்டை நம்பலாம் ஏனென்றால் அநேக நம்பத்தகுந்த ஆதாரங்கள் அவைகளுக்கு இருக்கின்றன. இந்தக் கட்டுரை கீழ்கண்ட குறிப்புகளின் தகவல்களைத் தருகிறது: வரலாற்று வல்லுநர்களின் கருத்து ஒற்றுமை, தொல்பொருள் ஆராய்சியாளர்களின் கருத்து ஒற்றுமை, நான்கு சுவிசேஷத்தில் காணப்படும் வாழ்க்கை குறிப்புகளின் ஒற்றுமை, பாதுகாக்கப்பட்ட ஆவணத்தின் நகல் குறிப்பிடதக்கது, மொழிப்பெயர்ப்பு முழுமையாக நேர்த்தியாய் இருத்தல். இவை அனைத்தும் நாம் இன்று வாசிப்பது மூல முதலான ஆசிரியர்களால் தங்களின் வாழ்க்கiயில் உண்மை அனுபவம் மற்றும் மூல இடத்தில் இருந்து எழுதப்பட்டது என்பதை விசுவாசிக்கச் சரியான அடிப்படையாக இருக்கின்றது.

ஆசிரியர்களுல் ஒருவரான யோவான் சுருக்கமாகச் சொல்லுவது, “இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும் படியாகவம். இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.”13

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) Strobel, Lee. The Case for Christ (Zondervan Publishing House, 1998), p. 132. (2) The renowned Jewish archaeologist, Nelson Glueck, wrote: "It may be stated categorically that no archaeological discovery has ever controverted a biblical reference." cited by McDowell, Josh. (3) Strobel, p. 143-144. (4) Geisler, Norman L. Baker Encyclopedia of Christian Apologetics (Grand Rapids: Baker, 1998). (5) McDowell, Josh. Evidence That Demands a Verdict (1972), p. 19. (6) McDowell, Josh. The New Evidence that Demands a Verdict (Thomas Nelson Publishers, 1999), p. 55. (7) Tacitus, A. 15.44. (8) Wilkins, Michael J. & Moreland, J.P. Jesus Under Fire (Zondervan Publishing House, 1995), p. 40. (9) Ibid. (10) Bruce, F.F. The Books and the Parchments: How We Got Our English Bible (Fleming H. Revell Co., 1950), p. 113. (11) பார்க்க அப்போஸ்தலர் 2:22, 3:13, 4:13, 5:30, 5:42, 6:14, மேலும் பல (12) லூக்கா 1:1-3 (13) யோவான் 20:30,31

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP